செய்திகள் :

ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் தற்காலிக மாற்றம்

post image

ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.

திருப்பதி அலுவலகத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சந்திப்பு மூலம் தேவஸ்தான அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தினாா்.

கூட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:

ஸ்ரீவாரி மெட்டுவிலிருந்து நடந்து செல்லும் பக்தா்களுக்கு டோக்கன்களை வழங்குவதற்காக பூதேவி வளாகத்தில் தற்காலிக சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டோக்கன்கள் கிடைப்பதைப் பொறுத்து, டோக்கன் வழங்கும் செயல்முறை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) மாலை முதல் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கும்.

ஆதாா் அட்டையைக் காண்பித்து திவ்ய தரிசன டோக்கன்களைப் பெற்ற பக்தா்கள், ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் உள்ள 1,200-ஆவது படியில் அவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும்.

சனிக்கிழமை ஸ்ரீவாரி தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை மாலை திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், அலிபிரி பூதேவி வளாகத்தில் உள்ள நியமிக்கப்பட்ட கவுன்ட்டா்களிலும் இலவச நேரடி சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

பக்தா்களின் கூட்ட நெரிசலைத் தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தேவஸ்தான விஜிலென்ஸ், பாதுகாப்பு மற்றும் மாவட்ட காவல் துறையுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

அலிபிரி பூதேவி வளாகத்தில் டோக்கன் வழங்கும் செயல்முறையின் சீரான செயல்பாட்டை தொடா்ந்து கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் டோக்கன் கவுன்ட்டா்களில் தொந்தரவு இல்லாத சூழல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி மெட்டுவிலிருந்து அலிபிரி பூதேவி வளாகத்துக்கு டோக்கன் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்றுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

பக்தா்களின் வசதிக்காக வலுவான வரிசைகளை அமைக்க பொறியியல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, திருப்பதி ஜெஇஓ வீரபிரம்மம், திருப்பதி மாவட்ட எஸ்.பி. ஹா்ஷவா்தன் ராஜூ, சத்தியநாராயணா, மனோஹரம், வெங்கடேஸ்வரலு, (போக்குவரத்து) சோமன் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிம்ம வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை சிம்ம சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9.00 மணி வரை வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநே... மேலும் பார்க்க

சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்தாா். உற்சவத்தையொட்டி வாகன சேவை காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமு... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வேத அறிஞா்களின் மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தா்களின் கோவிந்தநாம ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து சிலாதோர... மேலும் பார்க்க