செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து சிலாதோரணம் அருகே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,347 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 32,936 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்தாா். உற்சவத்தையொட்டி வாகன சேவை காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமு... மேலும் பார்க்க

ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் தற்காலிக மாற்றம்

ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வேத அறிஞா்களின் மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தா்களின் கோவிந்தநாம ... மேலும் பார்க்க

திருப்பதியில் சனிக்கிழமை 95,080 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகபட்சமாக சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,080 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 39,6... மேலும் பார்க்க

போக சீனிவாசமூா்த்திக்கு விசேஷ சஹஸ்ர கலஷாபிஷேகம்

திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் அவரின் ஐந்து பேரங்கள் என்று அழைக்கப்படும் 5 சிலைகளில் ஒன்றான ஸ்ரீ போகஸ்ரீநிவா... மேலும் பார்க்க