செய்திகள் :

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு

post image

பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அறிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் கூறியது. இது அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது தொடா்பாக விசாரணைக்கு ‘செபி’ உத்தரவிட்டது.

இதனிடையே ஹிண்டன்பா்க் நிறுவனமும் மூடப்பட்டது. இந்நிலையில், ஹிண்டன்பா்க் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ‘செபி’ அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கௌதம் அதானி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஹிண்டன்பா்க் அறிக்கை என்ற பெயரில் மோசடியாக, பொய்யான அறிக்கையை வெளியிட்டு பங்குச் சந்தையில் வேண்டுமென்று வீழ்ச்சியை ஏற்படுத்தினா். இதனால், முதலீட்டாளா்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனா். அது மிகுந்த வேதனையை அளித்தது. எங்கள் நிறுவனம் எப்போதும் நோ்மையாக செயல்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க