செய்திகள் :

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

post image

ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 12 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 484 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில், மண்டி மாவட்டத்தில் 245 சாலைகளும், அருகிலுள்ள குலுவில் 102 சாலைகளும் அடங்கும். பிலாஸ்பூர், ஹமீர்பூர், உனா மற்றும் சோலன் மாவட்டங்களில் குடியிருப்பு நிறுவனங்கள் தவிர, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே மாநிலத்தின் இரண்டு முதல் ஏழு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஆகஸ்ட் 30 வரை கனமழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் மொத்தம் 941 மின் விநியோக மின்மாற்றிகள் மற்றும் 95 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

பருவமழை தொடங்கிய ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை, மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 155 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கூறியுள்ளது. இதுவரை 77 திடீர் வெள்ளங்கள், 40 மேக வெடிப்புகள் மற்றும் 79 பெரிய நிலச்சரிவுகளை மாநிலம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில் ஹிமாச்சலப் பிரதேசம் ரூ.2,348 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Between June 20, the onset of monsoon, and August 24, at least 155 people have died in Himachal Pradesh in rain-related incidents, while 37 have gone missing.


ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை! தனியார் கல்லூரி விளம்பரத்துக்கு வந்த சோதனை!

தங்கள் கல்லூரியில் படித்த இளைஞருக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கொடுக்கும் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி தனியார் கல்விக் குழுமம் வெளியிட்ட விளம்பரம் வைரலாகியிருக்கிறது.ஒவ்வொரு கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவ... மேலும் பார்க்க

ராகுல்காந்தி ஒரு தொடர் பொய்யர்: முதல்வர் ஃபட்னவீஸ் விமர்சனம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு "தொடர் பொய்யர்" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தப் பொய்கள்... மேலும் பார்க்க

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை 48 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 10வது குழுவுடன் யாத்திரை நிறைவடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 48 பக்த... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க