செய்திகள் :

அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

post image

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்.

கடந்த ஜூன் 12ம் தேதி போயிங் 787 விமானம் புறப்படுகையில் ஏற்பட்ட விபத்தினால் பிஜே மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் மருத்துவமனை கட்டடத்திலிருந்த 38 பேர் என 279 மரணமடைந்துள்ளனர்.

ministry of civil aviation Minister
ministry of civil aviation Minister

இந்த சம்பவம் நடந்து ஒருவார காலத்தில், விமான நிலையம் அருகில் இருக்கும் கட்டடங்கள் மரங்கள் உள்ளிட்ட தடைகளை நீக்குவதற்கான விமான விதிகள் 2025 வெளியாகியிருக்கின்றன.

இந்த விதி அதிகாரிகள், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட வரையரைக்குள் தடைகளை ஏற்படுத்தும்விதமாக இருக்கும் கட்டடங்கள், மரங்கள் பற்றி புகாரளிக்கவும், அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆவண செய்கின்றன.

இந்த விதிகள் அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

Ahmedabad Plane crash

விதிமுறைகளை மீறிய கட்டங்கள் அல்லது மரங்கள் இருக்கும் விமான நிலையத்தின் அதிகாரி, உனடடியாக அது தொடர்பாக இயக்குநர் ஜெனரலுக்கு (DGCA) அல்லது இது தொடர்பான உரிய அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என வழிகாட்டுகிறது புதிய விதிமுறை.

அதிகாரிகள் வழங்கும் நோட்டீஸுக்கு இணங்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கீகரிக்கப்படாத கட்டடத்தை இடிப்பார் அல்லது அதன் உயரத்தை குறைப்பார்.

இதில் பாதிக்கப்படும் உரிமையாளர் நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு, முதல் அல்லது இரண்டாவது மேல் முறையீட்டு அலுவலகத்தை நாடி மேல்முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர் தங்கள் தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு அதிகாரி உத்தரவு பிறப்பிப்பார்.

இந்த புதிய விதி குறித்த ஆட்சோபனைகள், பரிந்துரைகள் இருந்தால் அமைச்சகத்தில் சமர்பிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டம் ரூ1 கோடியில் லாயிட்ஸ் சாலையை புதுப்பிக்க டிஆர்ஏ நிறுவனம் அடிக்கல்

சென்னை நகரை அழகுபடுத்தும் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு உதவிடும் வகையில் சென்னை நகரின் மிகவும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஆர்ஏ 1 கோடி ரூபாய் செலவில் சர் வி.பி.... மேலும் பார்க்க

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

டிக்கெட் முன்பதிவா... வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா... இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் 'ஆதார்'. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல மு... மேலும் பார்க்க

``முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்; ஸ்டாலின் பக்கம்தான் முருகன்..” - சேகர் பாபு

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்... மேலும் பார்க்க

கேரளா: "பெட்ரோல் நிலைய கழிப்பறைகள் பொதுப் பயன்பாட்டுக்கு அல்ல" - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் பெட்ரோலிய வணிகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பானது, பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்துவதை எதிர்... மேலும் பார்க்க