செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

post image

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.

நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. என்னைச் சுற்றி விமானத்தின் சிறு சிறு துண்டுகள் கிடந்தன.

என் இருக்கை அருகே விரிசல் ஏற்பட்டது. அதன் வழியே வெளியே குதித்தேன். எழுந்து ஓடினேன்.

யாரோ என்னை இழுத்து, ஆம்புலன்சில் போட்டு, மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்"

இது விஸ்வாஷ் குமார் ரமேஷ் 'ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு' கொடுத்த பேட்டி.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

யார் இந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ்?

நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்தான் இந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ். இவர் பிரிட்டிஷ் குடிமகன் ஆவார். ஆனால், விஸ்வாஷ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவரும், அவரது சகோதரரும் தங்களது குடும்பத்தைப் பார்க்க, இந்தியா வந்துள்ளனர். மீண்டும் லண்டன் செல்வதற்காகப் பயணித்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இவரது சகோதரர் உயிரிழந்த நிலையில், இவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

சீட் நம்பர் 11A

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த இவர் சிறு, சிறு காயங்கள், ஆங்காங்கே ரத்த கறைகளுடன் எழுந்து சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ நேற்று வைரலானது.

'இவருக்குப் பெரிய பாதிப்பு இல்லை' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பிய இவர் பயணித்த சீட்டின் நம்பர் '11A'.

இந்த சீட் எமர்ஜென்சி கதவுகளுக்கு அருகில் உள்ளது மற்றும் விமானத்தையும், அதன் இறக்கைகளையும் இணைக்கும் பகுதியில் இருக்கும் சீட் இது.

விஸ்வாஷ் குமார் ரமேஷின் போர்டிங் பாஸ்
விஸ்வாஷ் குமார் ரமேஷின் போர்டிங் பாஸ்

விமானம் தரையில் விழும்போது, இந்தப் பகுதியில் பலத்த அடி இருக்கும். அப்படி இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் உயிர் தப்பினார் என்பது மிகுந்த ஆச்சரியம் என்று விமானத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அந்த விமானத்தின் போர்டிங் பாஸ் இன்னமும் விஸ்வாஷிடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க