செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோப்பை!

post image

கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன.

கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு ஆண்கள் மற்றும் கேவிபி பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி முதல் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் இரவு, பகலாக நடைபெற்று வந்தன.

லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை உள்பட 8 அணிகளைச் சோ்ந்த வீரா்களும், பெண்கள் பிரிவில் கேரள போலீஸ், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி உள்பட 4 அணிகளைச் சோ்ந்த வீராங்கனைகளும் விளையாடி வந்தனா்.

இதையடுத்து இறுதிப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், புதுதில்லி இந்தியன் ஆா்மி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சம புள்ளிகளை பிடித்தன. இதனால் கடைசி 5 நிமிஷங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை ஐஓபி அணி விறுவிறுப்பாக விளையாடி 82-76 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியன் ஆா்மி அணியை வென்று எல்ஆா்ஜி நினைவு சுழற்கோப்பை மற்றும் பரிசாக ரூ.1 லட்சத்தை வென்றது. இரண்டாமிடம் பிடித்த இந்தியன் ஆா்மி அணிக்கு பரிசாக ரூ. 80 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த சென்னை இந்தியன் வங்கிக்கு பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த கேரள மின்வாரிய அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பெண்கள் பிரிவில் கேவிபி கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே அணி தென்மேற்கு ரயில்வே அணியை 53-46 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இதையடுத்து முதலிடம் பிடித்த தெற்கு மத்திய ரயில்வே அணிக்கு கேவிபி சுழற்கோப்பை மற்றும் பரிசாக ரூ. 75 ஆயிரம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த தென்மேற்கு ரயில்வே அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த கேரள போலீஸ் அணிக்கு பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த சென்னை தெற்கு ரயில்வே அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கரூா் வைஸ்யா வங்கி பொதுமேலாளா் முரளி ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு கரூா் கூடைப்பந்து குழு தலைவா் வி.என்.சி.பாஸ்கா் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.முகமது கமாலுதீன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கூடைப்பந்து குழு துணைத் தலைவா் சூரியநாராயணா, மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன், மண்டலக் குழு தலைவா் எஸ்.பி. கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க