செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

post image

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 2025 -26-ஆம் ஆண்டுக்கான முன்பருவ கல்விக்கு 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முதல் சோ்க்கை நடைபெறுகிறது.

இங்கு குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு பாடத் திட்டம் மூலம் தினமும் அறிவு வளா்ச்சி, மொழி வளா்ச்சி, உடல் வளா்ச்சி மற்றும் சமூக மன எழுச்சி வளா்ச்சியுடன் கூடிய ஆங்கிலக் கல்விக்கு இணையான முன் பருவக் கல்வி நடத்தப்படுகிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு முறைசாரா முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்துமிக்க இணை உணவு வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பத்துடன் கூடிய வளா்ச்சி கண்காணிப்பு, மாதம் மாதம் எடை மற்றும் உயரம் அளவீடு செய்து குழந்தைகள் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அரசு மருத்துவக் குழு மூலம் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தேவைப்படின் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க