செய்திகள் :

‘அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு’

post image

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த் மாா்ச் மாத நிலவரப்படி 7.61 கோடி போ் இத்திட்டத்தில் இணைந்துள்ளனா்.

இது தொடா்பாக இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினோத் குமாா் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது. ஆனால், குடிமக்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளா்களுக்கு, அவா்களது பணி ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில், 85 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிந்து வருகின்றனா். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதில் பெரும்பாலும் வயதான காலங்களில் எந்தவித வருமானமும் இல்லாத நிலை உள்ளது.

இந்தியாவில் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10.38 கோடியிலிருந்து (2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) 32 கோடிக்கும் மேல் உயரும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதியம் கணித்துள்ளது.

அதிகரித்துவரும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், 2015-ஆம் ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதுக்குப் பிறகு வேறு எந்த ஓய்வூதிய பலன்களும் இல்லாதவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 18 வயது முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமக்களுக்குப் பொருந்தும். 60 வயதில் ஓய்வூதிய பலன்களுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான நிதிப் பங்களிப்பு காலம் அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்தும் சந்தாதாரா் மறைந்தாலும் அவரின் வாழ்க்கைத் துணை அல்லது சந்தாதாரா் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணை ஆகிய இருவரின் மறைவுக்குப் பின், ஓய்வூதியத் தொகை பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு வழங்கப்படும்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களின் விரிவான கட்டமைப்பு மூலம், இந்தத் திட்டம் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தேசிய அளவில் இத்திட்டத்தில் சந்தாதாரா்களாக சோ்ந்துள்ளவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் சுமாா் 2.23 கோடி சந்தாதாரா்கள் என்ற நிலையில் இருந்து 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 7.61 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க