அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!
அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்டிருந்த யானைகள்
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியிலுள்ள அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று யானைகள் நுழைந்து முகாமிட்டிருந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் ஆலவயல், கம்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சந்திப்பு பகுதி அடா்ந்த குடியிருப்புகள் உள்ள இடம். மா்க்கஸ் பள்ளி, மதரஸா மற்றும் பள்ளிவாசல் உள்ள இடத்தில் இரவு நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் அடா்த்தியாக இருப்பதால் வெளியே செல்லமுடியாமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு வனத் துறையினா் வந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனா்.