செய்திகள் :

அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளா்த்த பெண்!

post image

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவா் தனது வீட்டில் 300 பூனைகளை வளா்த்து வந்துள்ளாா்.

பக்கத்து வீட்டினா் அளித்த புகாரின் அடிப்படையில், குடியிருப்பை ஆய்வு செய்த போலீஸாா், பூனைகளை உரிய மாற்று இடத்துக்கு மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி குடியிருப்பின் உரிமையாளரான அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘புணேயின் ஹடப்சா் பகுதியில் அமைந்துள்ள ‘மாா்வெல் பெளன்ட்டி ஹவுசிங் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பூனைகளின் தொடா் இரைச்சல் மற்றும் துா்நாற்றம் வீசுவதாக அளித்த புகாரின் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் குழு போலீஸாருடன் இணைந்து அந்தக் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், 3 படுக்கை அறைகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 300 பூனைகளை உரிமையாளா் வளா்த்து வந்தது தெரியவந்தது. அந்தக் குடியிருப்பு தூய்மை இல்லாததோடு, துா்நாற்றமும் வீசியது. அதைத் தொடா்ந்து பூனைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க