செய்திகள் :

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தீா்மானம்- மத்திய அரசு பரிசீலனை

post image

வீட்டில் எரிந்த நிலையில் பணம் கிடைத்த விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தீா்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இத்தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சிகளை அரசு விரைவில் தொடங்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தீ விபத்தைத் தொடா்ந்து, வீட்டில் கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக கண்டெடுக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். யஷ்வந்த் வா்மா தானாகவே பதவி விலகுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலுமாக மறுத்தாா்.

இதற்கிடையே, உச்சநீதிமன்றம் துறை ரீதியாக நடத்திய விசாரணையில், யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தை அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதில் ஒருமித்த ஆதரவை எட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்களுடன் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்றும் அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்தது! மேலும் 4 போ் பலி!

நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,684 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கட... மேலும் பார்க்க