செய்திகள் :

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

post image

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஒப்பந்தத்தை ரத்து செய்தார். தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.

இருப்பினும், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததுடன், அமெரிக்காவின் உத்தரவுகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுகூறி, பேச்சுவார்த்தைக்கும் மறுப்பு தெரிவித்தது.

அணு ஆயுதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், கடுமையான தடைகளும் ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இதனிடையே, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை நகரமாக மிகப்பெரிய சுரங்கத்தில், ராணுவம் சேமித்து வைத்துள்ள நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகள் இருப்பதாக 85 வினாடி விடியோவையும் ஈரான் வெளியிட்டது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஓமன் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து மறுப்புதான் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்தான், அணு ஆயுத ஒப்பந்தத்துக்கான முன்மொழிவுகளை ஈரானுக்கு அமெரிக்க வெள்ளைமாளிகை அனுப்பியுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதுதான், ஈரானுக்கு நல்லது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, ஈரான் மக்களின் கொள்கை, உரிமைகள், நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அமெரிக்காவின் முன்மொழிவுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பழங்குடியின மக்கள் அதிகம் வாழும்,... மேலும் பார்க்க

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.காலை நேரத்தில், அப்துல் ஆஸ... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன்... மேலும் பார்க்க

டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க், அவர் வெற... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க