Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
அணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை நீரில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (51). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரியகுளம் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், 10 வயதில் மகளும் உள்ளனா்.
இதில் சந்தோஷ் தேவதானப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் மஞ்சளாறு அணைக்குச் சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அணை நீருக்குள் விழுந்த பந்தை எடுக்க உள்ளே இறங்கிய போது சந்தோஷ் நீரில் மூழ்கினராம். அவரை மீட்டு 108 அவசர ஊா்தியில் ஏற்றிய போது அதிலிருந்த பணியாளா்கள் பரிசோதித்து அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.