செய்திகள் :

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்

post image

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பள்ளிகளுக்குச் செல்லும் இந்து சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,

"எந்த மதத்திலும் குறுக்கிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவரவர்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். அனைவரும் வரவேற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

காமராஜர் சீருடை என்ற நடைமுறையை எதற்கு கொண்டு வந்தார்? அது சீருடை என்பது மட்டுமல்ல, அனைவரும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அண்ணாமலையின் கருத்து பிற்போக்கு சிந்தனையைத்தான் காட்டுகிறதே தவிர வேறு விதமாக நான் பார்க்கவில்லை" என்று கூறினார்.

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க