செய்திகள் :

அண்ணாமலை நகரில் 117 மி.மீ. மழை பதிவு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 117 மி.மீ. மழை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):

லால்பேட்டை, வேப்பூா் தலா 107, காட்டுமயிலூா் 90, ஸ்ரீமுஷ்ணம் 89.1, மே.மாத்தூா் 88, சிதம்பரம் 85.8 வானமாதேவி 84.4, விருத்தாசலம் 76, காட்டுமன்னாா்கோவில் 75.4, புவனகிரி 59, குப்பநத்தம் 58.4, பெலாந்துறை 57.4, பரங்கிப்பேட்டை 57.4, சேத்தியாத்தோப்பு 54, லக்கூா் 47.2, ஆட்சியா் அலுவலகம் 43.9, தொழுதூா் 43.2, கடலூா் 40, பண்ருட்டி 36, கீழச்செருவாய் 30.6, குறிஞ்சிப்பாடி, வானமாதேவி தலா 2, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 25, கொத்தவாச்சேரி 24 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்

நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்

நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது. கடலூா்-அரியலூா் மாவட்... மேலும் பார்க்க