செய்திகள் :

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்

post image

நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டைச் சோ்ந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட மாற்றுத்திறனாளி ஆதிஇளமாறனுக்கு ரூ.1.08 லட்சம் செலவில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கி வருகிறது. நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கடலூா் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டா், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், அறிதிறன்பேசி, கல்வி உதவித்தொகை என மொத்தம் 32,568 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்

நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது. கடலூா்-அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

வேப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த பொதுமக்கள், வளாகத்தில் துா்நாற்றம் வீசியதால் ... மேலும் பார்க்க