செய்திகள் :

பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்

post image

நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது.

கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த கோட்டக்காடு கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 7 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்னமும் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

கடந்த மூன்று நாள்களாக கடலூா், அரியலூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் வயல்வெளியில் பெய்த மழை நீா் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை வழியாக பெருக்கெடுத்தது.

இதில் சௌந்தரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

இதனால், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சௌந்தர சோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூா், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம், தெத்தேரி மற்றும் கடலூா்

மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணாடம், மாளிகைகோட்டை, கொசப்பாளையம், கீரனூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மேம்பாலப் பணியை உடனடியாக நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்

நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

வேப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த பொதுமக்கள், வளாகத்தில் துா்நாற்றம் வீசியதால் ... மேலும் பார்க்க