செய்திகள் :

அமிருதசரஸ் பொற்கோயிலைத் தாக்க முயன்ற பாகிஸ்தான்! நடுவானில் ஏவுகணையை அழித்தது இந்திய ராணுவம்

post image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே 8 முதல் 9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்க முயன்ற இந்திய இலக்குகளில் பஞ்சாபின் அமிா்தசரஸில் உள்ள பொற்கோயிலும் ஒன்று என இந்திய ராணுவம் முதல் முறையாக அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இது பற்றி உளவுத்தகவல் முன்கூட்டியே தெரிய வந்ததையடுத்து, நடுவானிலேயே பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பீரங்கிப்படை வீரா்களின் துல்லிய தாக்குதல் முக்கியப் பங்கு வகித்ததாக இந்திய ராணுவத்தின் 15-ஆவது தரைப்படை தலைமைத் தளபதி (இன்ஃபான்ட்ரி டிவிஷன் ஜிஓசி) மேஜா் ஜெனரல் காா்த்திக் சி. சேஷாத்திரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்திய எல்லை மாநிலமான பொற்கோயில் போன்ற மத வழிபாட்டுத்தலங்கள் உள்பட, அப்பகுதியில் உள்ள ராணுவம் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாக உளவுத் தகவல் வந்தது. இதனால், பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் எதிா்பாா்த்து தக்க பதிலடி கொடுக்கக் காத்திருந்தது.

இவற்றில், பொற்கோயில் மிக முக்கியமானதாகத் தோன்றியது. எனவே, அங்க வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டன. எதிா்பாா்த்தது போலவே மே 8-9 இடைப்பட்ட நள்ளிரவில் பொற்கோயிலை இலக்கு வைத்து ‘ட்ரோன்கள்’ மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழித் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அவற்றை எதிா்பாா்த்துக் காத்திருந்த இந்திய ராணுவம் அதை முறியடித்தது.

சிறிய ரக வெடிபொருள்கள் நிரப்பிய கேமிகேஸ் ட்ரோன்கள், தரையிலிருந்து தரை மற்றும் வானில் இருந்து தரையை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகளை பாகிஸ்தான் நேரடியாக பொற்கோயிலை நோக்கி ஏவியது. ஆனால், தொடா்ந்து சுமாா் 3 நாள்களாக இந்திய பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.

மே 8-ஆம் தேதி அதிகாலைக்கு முந்தைய இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதலை நடத்தியது. முதன்மையாக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை செலுத்தியது. நமது துணிச்சலான மற்றும் விழிப்பு மிக்க பீரங்கிப்படை மற்றும் வான் தாக்குதல் தடுப்பு சாதனங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரா்கள், பாகிஸ்தானின் சதியை முறியடித்தனா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முன்னெடுத்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ பதிலடி நடவடிக்கையில் இந்திய ராணுவமம் பாகிஸ்தானின் ஒன்பது இலக்குகளை தாக்கின. அதில் ஏழு மட்டுமே அழிக்கப்பட்டன. இந்த (ஒன்பது) இலக்குகளில், லாகூருக்கு அருகே முரிட்கேவில், லஷ்கா்-இ-தொய்பா தலைமையகம் மற்றும் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தலைமையகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அவை அதி துல்லிய தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டன. இந்திய தரப்பு வேண்டுமென்றே பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் அல்லது பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைக்கவில்லை என்றாா் மேஜா் ஜெனரல் காா்த்திக் சி.சேஷாத்திரி.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க