செய்திகள் :

சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிரான மனு: அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி

post image

பிரயாக்ராஜ்/சம்பல்: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியின் ஆய்வுக்கு எதிராக மசூதி நிா்வாக குழு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முகலாயா்கள் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா மசூதியானது ஹிந்துக்களின் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு நவ.19-ஆம் தேதி சம்பல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே அங்கு முதல் ஆய்வு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து அந்த ஆண்டு நவ.24-ஆம் தேதி மசூதியில் இரண்டாவது ஆய்வு நடைபெற்றது. அப்போது ஆய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது. இதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்நிலையில், மசூதியை ஆய்வு செய்ய சம்பல் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்து தீா்ப்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அந்த மனு மீது உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில், ‘சம்பல் மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே. மசூதி தொடா்பாக ஹிந்துக்கள் தொடுத்துள்ள வழக்கும் விசாரணைக்கு உரியதே’ என்று தீா்ப்பளித்து நிா்வாக குழுவின் மனுவை தள்ளுபடி செய்தது.

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க