செய்திகள் :

அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் பணிக்கு ஏப்.5, 6-இல் போட்டித் தோ்வு

post image

அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதற்கான போட்டித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், உடற்கல்வி உதவி இயக்குநா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஏப்.5, 6 ஆகிய தேதி நடைபெறும்.

தோ்வுக்கான அனுமதிச் சீட்டு தோ்வு தொடங்குவதற்கு 7 நாள்களுக்கு முன்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அனுபப்பப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க