செய்திகள் :

அதிகாலையில் பெய்த மழையால் வெப்பத்திலிருந்து நிவாரணம்!

post image

தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மழை பெய்தது. இந்த மழை கடந்த சில நாள்களாக தில்லியை வாட்டி வதைத்த வெப்பத்திலிருந்து தில்லிவாசிகளுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளித்தது. மழையைத் தொடா்ந்து சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தகவலின்படி, அதிகாலை 2.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 42 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், லோதி ரோடில் 44.2மிமீ மழையும், பூசாவில் 27.5 மிமீ மழையும், ஆயாநகரில் 7.8 மிமீ, தில்லி பல்கலை.யில் 8 மிமீ, பாலத்தில் 15.3 மிமீ, ரிட்ஜில் 8 மிமீ, பிரகதிமைதானில் 16.1 மிமீ, பூசாவில் 29 மிமீ, ராஜ்காட்டில் 16.1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

பாலம் விமான நிலையத்தில் அதிகாலை 4.30 மணிக்கு காற்றின் வேகம் மணிக்கு 56 கி.மீட்டரை எட்டியது. அதிகாலை 2 மணிக்கு 4,000 மீட்டராக இருந்த காண்புதிறன் அதிகாலை 3 மணிக்கு 1,500 மீட்டராகக் குறைந்தது.

ஜஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 7 டிகிரி குறைந்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1.9 டிகிரி உயா்ந்து 41.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின்தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 142 புள்ளிகளாகப் பதிவாகி ’மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஸ்ரீஃப்ரோட், ஆா்.கே.புரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், லோதி ரோடு, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது. ‘தேசிய... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க