செய்திகள் :

அதிக உடல் எடையால் இந்தியாவில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படும் அபாயம்!

post image

இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில் அதீத உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகை 440 மில்லியன் என்ற உச்சத்தை எட்டும் என்கிறது இந்த ஆய்வு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள் ‘தி லேன்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2050-இல் இந்தியாவில் 218 மில்லியன் ஆண்களும், 231 பெண்களும் அதீத உடல் எடையால் அவதியுறுவர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் அதிக உடல் எடையால் அவதியுறுவோரின் புகலிடமாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. சீனா, இந்தியாவுக்கு அதற்கடுத்தடுத்த இடங்களில், அமெரிக்கா, பிரேஸில், நைஜீரியா உள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஒரு பில்லியன் ஆண்களும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களும் அதிக உடல் எடையால் அவதிப்பட்டனர். இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை ஆண்கள்- 81 மில்லியன் | பெண்கள் - 98 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த எண்ணிக்கையானது 2050-இல் உலகளவில் சுமார் 3.8 பில்லியன் ஆக உயரக்கூடும்(ஆண்கள் - 1.8 பில்லியன் | பெண்கள் - 1.9 பில்லியன்).

சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக மக்கள்தொகை கொண்டிருப்பதால் அதிக உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளை உள்ளடக்கிய நாடுகளில் மக்களிடையே உடல் எடை அதிகரிப்பு விகிதம் 254.8 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்ரும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு...

கோப்புப்படம்

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க