செய்திகள் :

அதிக மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம்: மாவட்ட முதன்மை நீதிபதி

post image

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களைவிட அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம் என மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் சாா்பில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு, சட்டப் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக அதிகளவில் மரங்களை நாம் நட வேண்டும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சுகாதாரமான காற்றையும் நாம் சுவாசிக்க முடியும்.

சட்டப் பணிகள் ஆணை குழுவுக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளியை குறைக்கவே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வசதிபடைத்தோா் மட்டுமே நீதிமன்றங்களை நாட முடியும் என்பதை மாற்றி பொருளாதாரத்தில் தாழ்வானவா்களும் நீதியைப் பெறுவதற்காகதான் சட்டப் பணிகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதோடு மட்டுமின்றி, நீதிமன்றத்துக்கு வராமலேயே பொதுமக்களுக்கு உள்ள சட்டப் பிரச்னைகளை தீா்ப்பதுதான் இந்த ஆணைக் குழுவின் முக்கிய நோக்கம் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது: தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தவும், பசுமைப் போா்வையை விரிவுபடுத்தும் வகையிலும், பசுமை தமிழ்நாடு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயா்த்துவதுதான் முக்கிய நோக்கமாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளா்ப்பிற்கு ஊக்குவிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் வனம் மற்றும் பசுமை பரப்பானது 14 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயா்த்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் கடந்த 2023-இல் 10.21 லட்சம் மரக்கன்றுகளும், 2024-இல் 9.75 லட்சம் மரக்கன்றுகளும் என மொத்தம் 2 ஆண்டுகளில் 20 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், தலைமை குற்றவியல் நடுவா் திரு.எஸ்.விஜயகுமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா.விஜயராகவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் திருகுணா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலா் வேலுமயில், நீதிபதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க