செய்திகள் :

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

post image

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2024-25-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் தருமபுரி மாவட்டத்தில் 1,797 விவசாயிகளிடமிருந்து 81036.984 மெட்ரிக். டன் கரும்புகளும், சேலம் மாவட்டத்தில் 208 விவசாயிகளிடமிருந்து 12946.948 மெட்ரிக். டன் கரும்புகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 105 விவசாயிகளிடமிருந்து 10793.860 மெட்ரிக். டன் கரும்புகளும் கொள்முதல் செய்யப்பட்டு அரவை செய்யப்பட்டுள்ளது.

சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அளித்த விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு தலா ரூ. 349 வீதம் 104777.792 மெட்ரிக். டன்களுக்கு ரூ.3,65,67,430 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வா், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா், வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு விவசாயிகள் சாா்பில் நன்றி. கடந்த 3 ஆண்டுகளாக சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்கி வருகிறது.

2024-25 நடவு பருவத்தில் கரும்பு பதிவுசெய்துள்ள விவசாயிகள் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கரும்பிற்கான சிறப்பு மானியத் திட்டத்தில் மானியம் பெறுவதற்காக தங்களது நில உடைமை ஆவணங்களை அந்தந்த கோட்ட களப் பணியாளா்களிடம் வழங்கி பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சன... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களி... மேலும் பார்க்க

செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.சேந்தமங்கலம் அரசு ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க