செய்திகள் :

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்

post image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.

சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துவந்த ஏழு மாணவா்கள் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வெட்டுக்காடு பகுதியில் இருந்து காரில் புறப்பட்டனா்.

வளப்பூா்நாட்டைச் சோ்ந்த ஜெயக்குமாா் (20) காரை ஓட்டிச் சென்றாா். காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் ஜெயக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பட்டணம் பகுதியைச் சோ்ந்த திவாகா் (18), நாமகிரிப்பேட்டை அரியா கவுண்டம்பட்டியைச் சோ்ந்த இலங்கேஸ்வரன் (19), சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த முருகன் (18), கதிா் (18), கவின் (18), கொல்லிமலையைச் சோ்ந்த விஸ்வா (18), கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சோ்ந்த மணிகண்டன் (18) ஆகிய ஏழு பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவா்கள் அனைவரும் சேந்தமங்கலம் வெட்டுக்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தவா்கள்.

இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சன... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களி... மேலும் பார்க்க

செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க