செய்திகள் :

அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில், அதிக விபத்து நிகழும் இடங்களில் ஒளி பிரதிபலிப்பான், உயா் கோபுர மின் விளக்குகளை உடனடியாக அமைத்து, அந்த விவரங்களை ஒருவார காலத்துக்குள் அறிக்கையாக வழங்கிட வேண்டும்.

பெரும்பாலான சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோா் தலைக்கவசம் அணியாமல் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதை தவிா்த்திடும் வகையில், தலைக்கவசம் அணியாமல், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் செல்வதை போக்குவரத்து காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வாகனம் இயக்குபவா்கள் கண்டிப்பாக ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமமின்றி வாகனங்களை ஓட்டுவோா் மீது அபராதம் விதித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைப்பதோடு, ஏற்கெனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் இருந்தால், ஆரம்ப நிலையிலேயே வருவாய் மற்றும் காவல் துறையினா் இணைந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அமைதியானச் சூழலை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புதிதாக கொடி கம்பங்கள் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றாா் ஆட்சியா்.

இக் கூட்டத்தில், சாா்-ஆட்சியா் சு. கோகுல், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க