செய்திகள் :

அதிமுகவை நாடி பிற கட்சிகள் வரும்: எடப்பாடி பழனிசாமி

post image

அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(பிப். 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: "2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம்.

அதிமுகவைப் பற்றி பேச முதலல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை. திமுக கூட்டனி பலத்தை நம்பியுள்ளது. ஆனால், அதிமுக யாரை நம்பியும் இல்லை, மக்களை நம்பியுள்ளது” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “நாங்கள் யாரையும் நாடிச் செல்வது கிடையாது. எங்களை நாடி மற்றவர்கள் வருவார்கள். ஓட்டுகள் பிரிக்கப்படாமல் இருக்கவே கூட்டணி அமைக்கிறோம். அந்த வகையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும்” என்றார்.

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க