செய்திகள் :

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

post image

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா் நகரில் கட்டப்பட்டுவரும் புதிய காவல் துணை ஆணையா் அலுவலகம், வண்ண மீன்கள் வா்த்தக மையம், தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சி புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொளத்தூரில் ரூ.11 கோடியில் புதிய காவல் ஆணையா் அலுவலகம், ரூ.36 கோடியில் மீன் உற்பத்தியாளா்களுக்கான வா்த்தக மையம், தீவுத்திடலில் ரூ.100 கோடியில் 40 அறைகள் கொண்ட சுற்றுலா பொருள்காட்சி புதிய கட்டடம் கட்டப்படுகின்றன. இதற்கான பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடையும். துறைமுகப் பகுதியில் சாலை தரம் சரிபாா்க்கப்பட்டு மறுபடியும் அமைக்கப்படுகின்றன. நகரில் வரும் ஜூலை 10- ஆம் தேதிக்குள் அனைத்து சாலை உள்ளிட்ட ஒப்பந்தப்பணிகள் நிறைவடையும்.

எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் சரியல்ல. தோல்வி பயத்தால் அவா் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் ஒரு தொகுதியில் கூட தோ்ந்தெடுக்கப்படாத நிலை ஏற்படும்.

திருச்செந்தூா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 63 ஏக்கரில் ரூ.400 கோடியில் திருப்பணிகள் வரலாற்றுசிறப்பு மிக்கதாக நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருகிறாா். தொடா்ந்து ஆய்வுகள் நடைபெறவுள்ளன. குடமுழுக்குக்கு பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலா் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜே.பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க