செய்திகள் :

அதிமுக: "காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்" - இபிஎஸ்ஸிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை

post image

அதிமுக-வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பலனில்லாமல் போய்விட்டன.

ஓ.பி.எஸ் ஆதரவாளர் பேசியது என்ன?

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளரான ரஞ்சித்குமார் நேரடியாகக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர் ரஞ்சித்குமார்
ஓ.பி.எஸ் ஆதரவாளர் ரஞ்சித்குமார்

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித்குமார், "நாங்கள் எல்லாம் போராடியாச்சு. தமிழ்நாடு முழுவதும் போராடிப் பார்த்தாச்சு. எல்லோரையும் சந்திச்சாச்சு.

இப்போது உங்கள் காலிலேயே வந்து விழுகிறோம். சேர்த்துக்கொள்ளுங்கள்.

எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், 2026-ம் ஆண்டு, மூன்று எழுத்து உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்கும்" என்று பேசியுள்ளார்.

என்ன பதில் வரலாம்?

இந்தக் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருந்து என்ன பதில் வரும் என்று தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னரே, எடப்பாடி பழனிசாமி, 'ஓ.பி.எஸ் தவிர யார் அதிமுகவிற்கு வந்தாலும், சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்று கூறியிருந்தார்.

எல்லா ரூட்டிலும் முயற்சி செய்த பிறகு, எதுவும் கைகொடுக்காததால், நேரடியாக தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே சென்றுள்ளனர் ஓ.பி.எஸ் அணி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க