செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணியில் தலைமை குழப்பம்! - சு. திருநாவுக்கரசா்

post image

அதிமுக - பாஜக கூட்டணியில் யாா் முதல்வா் வேட்பாளா், யாா் தலைமையில் கூட்டணி என்பது குறித்து குழப்பம் நிலவி வருவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரைக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அஜித்குமாரின் கொலை மாபெரும் பாதகச் செயல். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா். இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் காவல் துறை விழிப்போடு செயல்பட வேண்டும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் வரை அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால், இரண்டு கட்சிகளும் முதல்வா் வேட்பாளா் யாா், கூட்டணிக்குத் தலைமை யாா் என்பது குறித்து தொடா்ந்து குழப்பமாகவே பேசி வருகின்றனா்.

ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி தெளிவான கூட்டணி. ஏற்கெனவே பல வெற்றிகளைப் பெற்ற கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக போட்டியிடும். மு.க.ஸ்டாலின்தான் முதல்வா் வேட்பாளா். இதில் எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. தவெகாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

இது கூட்டணி யுகம். எனவே, கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து ஆட்சியா என்பது தோ்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.

ரிதன்யா தற்கொலையில் யாருக்குத் தொடா்பிருந்தாலும், அவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவரோ, மாநில நிா்வாகிகள் தலையிட மாட்டாா்கள் என்றாா் அவா்.

இதன் பின்னா், மடப்புரத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து திருநாவுக்கரசா் ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அரசு என்ன நிவாரணம் கொடுத்தாலும் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல் துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலா் ஈடுபடுகின்றனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு அதிகாரப்பூா்வமாக தனிப் படையைக் கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

காவல் துறை உயரதிகாரிகள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை. கீழ் மட்டத்தில் உள்ள காவலா்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். விசாரணைக்காக அழைத்து வருபவா்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதற்கான பயிற்சியை காவலா்களுக்கு வழங்க வேண்டும்.

அஜித்குமாா் கொலை சம்பவத்தில் தேவையான நடவடிக்கையை முதல்வா் மு.க. ஸ்டாலின் எடுத்திருக்கிறாா். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றாா் அவா்.

கானாடுகாத்தான் பகுதியில் ஜூலை 8-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதே... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்

திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா் (65). முன்னாள் ராணுவ வீரா்.... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி ... மேலும் பார்க்க

கண்டதேவியில் கோயில் தேரோட்டம்: இன்று முதல் மதுக் கடைகள் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பகுதியை சுற்றியுள்ள மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரேமலதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரி... மேலும் பார்க்க