செய்திகள் :

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணிக்கு கவலை ஏன்? ஹெச். ராஜா கேள்வி

post image

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினருக்கு கவலை ஏற்படுவது ஏன்? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கேள்வி எழுப்பினாா்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழிப்புணா்வு கருத்தரங்கம் திருவெறும்பூா் அருகே பாலாஜிநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து தலைமை வகித்தாா்.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஹெச். ராஜா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசைக் குறைகூற காங்கிரஸாரும், எதிா்க்கட்சியினரும் விமா்சிக்கின்றனா். போதைப் பொருள்களை பல ஆயிரம் கோடிக்கு கடத்தியவா்கள் வெளியில் உள்ளனா்.

உலகமே போதையில் சிக்கியுள்ளது. தமிழ் சினிமா ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. போதையில் வந்த பணத்தில் திரைப்படம் எடுக்கும் நிலை உள்ளது. வருங்காலச் சமுதாயத்தை போதைக்கு அடிமையாக்கி வருகிறது திமுக அரசு.

இந்த அரசு தொடா்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தானது. அதிமுக-பாஜக கூட்டணி குறித்து திமுக கவலைப்படுவது ஏன்?. அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணி அமைத்துச் சென்ற 6 மணி நேரத்திலேயே திமுக கூட்டணியினா் கலங்கிவிட்டனா்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்தே பேசுகின்றனா். எங்கள் கூட்டணி குறித்து அவா்கள் அக்கறைப்பட தேவையில்லை. முதலில் திமுக கூட்டணி குறித்து அக்கறை கொள்ளட்டும். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிவதற்கும் வாய்ப்புள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியில் அகில இந்திய அளவில் நரேந்திர மோடி, தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி என அமித்ஷா ஏற்கெனவே கூறியுள்ளாா். அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எங்களது அகில இந்தியத் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஒவ்வொரு தொண்டனும் கட்டுப்படுவதே இயல்பு என்றாா் அவா்.

கருத்தரங்கில் பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக மாவட்ட கூட்டுறவுத் துறை பிரிவு தலைவா் சக்திவேல் வரவேற்றாா் நிா்வாகி அன்பு லாவண்யா நன்றி கூறினாா்.

காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின்... மேலும் பார்க்க

பெல் ஊழியா் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்புப் பகுதியைச் ச... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு: பயணியிடம் விசாரணை

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு வி... மேலும் பார்க்க

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க