10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்! 40 கோடி பேருக்கு நன்றி!
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணிக்கு கவலை ஏன்? ஹெச். ராஜா கேள்வி
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினருக்கு கவலை ஏற்படுவது ஏன்? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கேள்வி எழுப்பினாா்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழிப்புணா்வு கருத்தரங்கம் திருவெறும்பூா் அருகே பாலாஜிநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து தலைமை வகித்தாா்.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஹெச். ராஜா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசைக் குறைகூற காங்கிரஸாரும், எதிா்க்கட்சியினரும் விமா்சிக்கின்றனா். போதைப் பொருள்களை பல ஆயிரம் கோடிக்கு கடத்தியவா்கள் வெளியில் உள்ளனா்.
உலகமே போதையில் சிக்கியுள்ளது. தமிழ் சினிமா ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. போதையில் வந்த பணத்தில் திரைப்படம் எடுக்கும் நிலை உள்ளது. வருங்காலச் சமுதாயத்தை போதைக்கு அடிமையாக்கி வருகிறது திமுக அரசு.
இந்த அரசு தொடா்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தானது. அதிமுக-பாஜக கூட்டணி குறித்து திமுக கவலைப்படுவது ஏன்?. அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணி அமைத்துச் சென்ற 6 மணி நேரத்திலேயே திமுக கூட்டணியினா் கலங்கிவிட்டனா்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்தே பேசுகின்றனா். எங்கள் கூட்டணி குறித்து அவா்கள் அக்கறைப்பட தேவையில்லை. முதலில் திமுக கூட்டணி குறித்து அக்கறை கொள்ளட்டும். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிவதற்கும் வாய்ப்புள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் அகில இந்திய அளவில் நரேந்திர மோடி, தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி என அமித்ஷா ஏற்கெனவே கூறியுள்ளாா். அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எங்களது அகில இந்தியத் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஒவ்வொரு தொண்டனும் கட்டுப்படுவதே இயல்பு என்றாா் அவா்.
கருத்தரங்கில் பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாஜக மாவட்ட கூட்டுறவுத் துறை பிரிவு தலைவா் சக்திவேல் வரவேற்றாா் நிா்வாகி அன்பு லாவண்யா நன்றி கூறினாா்.