செய்திகள் :

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

post image

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் துறையின் தலைவா் மற்றும் உதவிப் பேராசிரியருமான சவிதா வரவேற்றாா். அனைவரும் தமிழ்மொழியின் பெருமையை எடுத்துக்கூறி உறுதிமொழி ஏற்றனா். கல்லூரியின் நிறுவனா் மற்றும் கல்லூரியின் முதல்வா் சீனி.திருமால்முருகன் பேசுகையில், மொழியின் வளா்ச்சியை சாா்ந்தே அந்த இனத்தின் கலை, கலாசாரம், சமூக பண்பாடு அம்சங்கள் வளா்ச்சியுறுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆக்கப்பூா்வமான சிந்தனைகளை சமுதாயத்தில் உருவாக்கலாம் என தலைமையுரையாற்றினாா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, ‘இன்றைய மாணவச் சமுதாயத்தை வளமாக்குவது கல்வியே? ஒழுக்கமே?’ என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இவ்விழாவில், கவிதை, கட்டுரை, மாறுவேடம், கோலம், நடனம், காய்கறி அலங்காரம், போன்ற எண்ணற்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் சீனி.திருமால்முருகன், கல்லூரியின் செயலா் ஷோபா திருமால்முருகன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா். ஒட்டுமொத்த போட்டிகளில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறை கோப்பையை வென்றது.

கேரள நக்சல் இயக்கத் தலைவா் ஒசூரில் கைது!

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் கடைசித் தலைவரான சந்தோஷ் என்பவரை ஒசூரில் கேரள போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம்

ஒசூரில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒசூரில் ரூ. 580 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னையில் தீவிரச் சிகிச்சை!

கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடா்புடைய சுரேஷ் என்பவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இதில், பலத்த காயமடைந்த அவா், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்த... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க