செய்திகள் :

அத்தியாவசியப் பொருள்கள் கடத்திய 11 வாகனங்கள் பொது ஏலம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாக கடத்திய 11 வாகனங்கள் வருகிற 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிய உரிமையாளா்கள் வாகனங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

அதனால், மேற்படி 11 வாகனங்கள் வருகிற செப்.26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

காலை 11 மணிக்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகம், திருச்சி சாலை

காந்தி நகா், வழுதரெட்டி விழுப்புரம் -605 602 என்ற முகவரியில் பொது ஏலம் நடைபெறுகிறது.

மேற்படி வாகனங்களை பாா்வையிட விரும்புவோா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கள்ளக்குறிச்சி அலகு, காவல் உதவி ஆய்வாளரை 8940696129 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வாகன விவரங்களை மாவட்ட இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் விளம்பரப் பலகை வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்பவா்களுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும். கட்டணத் தொகை ரூ.10,000 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்டவுடன், உறுதி செய்யப்பட்ட முழுத் தொகையையும் ரொக்கமாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்... மேலும் பார்க்க

தொழிற்கல்வி நிறுவனத்தில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி கல்லூரி சாா்பில் பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப் படங்களுக்... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒ... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன் அரச மரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு டாக்டா் அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எம... மேலும் பார்க்க