செய்திகள் :

`அந்தப் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது' - ஆஸி. வீராங்கனைகளுக்கு தொல்லை; பாஜக மந்திரி சர்ச்சை கருத்து

post image

மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் கடந்த 25ம் தேதி மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டிக்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.

ஓட்டலில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளில் 2 பேர் அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றுள்ளனர்.

Australian Women's Team
Australian Women's Team

அப்போது, அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர் வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

"மைதானம் அல்லது ஓட்டலை விட்டு வெளியே செல்லும்போது வீராங்கனைகள் பாதுகாவலர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளிடம் கூறிவிட்டுதான் செல்ல வேண்டும்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஏன் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்கள். பயிற்சியாளரிடம் கூட சொல்லாமல் சென்றிருக்கின்றனர்.

அவர்கள் பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்-வீராங்கனைகளுக்கு இங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

Australia Women's Team
Australia Women's Team

இங்கிலாந்தில் கால்பந்தை போன்று இந்தியாவில் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன்.

வீராங்கனைகளுக்கு நடந்த இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்" என்று பேசியிருக்கிறார்.

பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

`இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப பெருமையா இருக்கு' - தங்கம் வென்று சாதனை படைத்த கபடி வீரர்கள்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச... மேலும் பார்க்க

'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' - ரோஹித் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்... மேலும் பார்க்க

RoKo: 'மீண்டும் ஆட வருவோமா என தெரியாது!' - உருகும் ரோஹித் - கோலி

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்த... மேலும் பார்க்க

சோனியா ராமன்: `சியாட்டில் ஸ்டார்ம்ஸ்' அணியின் ஹெட் கோச் - WNBA வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி!

தடைகளை உடைத்தெறிந்த சோனியா ராமன், WNBA (Women’s National Basketball Association)-ன் புகழ்பெற்ற சியாட்டில் ஸ்டார்ம்ஸ் (Seattle Storm) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிய... மேலும் பார்க்க

RoKo : 'ரோஹித்தின் கிடாக்கறி விருந்து; கோலியின் கம்பேக்! - அதிர்ந்த சிட்னி!

'RoKo வுக்கான சவால்!'பெரும் அனுபவமுள்ள இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த இரண்டு வீரர்களுக்கு முன்பாக, கிட்டத்தட்ட இதுதான் உங்களின் கடைசி வாய்ப்பு என்பதைப் போல ஒரு போட்டியைக் கொடுத்தால் அவர்கள் எப்படி ... மேலும் பார்க்க

Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோற்றிருக்கிறது. தொடரை இழந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக ... மேலும் பார்க்க