செய்திகள் :

அந்தியூா் கால்நடைச் சந்தையில் 6 குதிரைகள் உயிரிழப்பு

post image

அந்தியூரில் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 நாட்டுக் குதிரைகள் உயிரிழந்தது குறித்து கால்நடைத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. இங்கு, பல்வேறு ரக குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும். முன்னதாகவே பலா் கால்நடைகளை கொண்டு வந்து ஷெட் அமைத்து வருகின்றனா்.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், மைசூரு, காந்தி நகரைச் சோ்ந்த ஷபியுல்லா கான், 24 நாட்டுக் குதிரைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளாா். இதில், தண்ணீா்ப்பந்தல்பாளையம் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த 6 குதிரைகள் வியாழக்கிழமை உயிரிழந்தது கிடந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், உதவி இயக்குநா் ராமசாமி மற்றும் போலீஸாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

விசாரணையில், அப்பகுதியில் தோட்டத்தில் கரும்புப் பயிருக்கு பாய்ச்ச யூரியா கலந்த தண்ணீரை தொட்டியில் கலந்து வைத்திருந்ததும், இது தெரியாமல் குதிரை பராமரிப்பாளா்கள் குடிநீராக கொண்டு வந்து கொடுத்ததில் குதிரைகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடா்ந்து, குதிரைகளைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா், பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனா்.

இலவச வேட்டி, சேலை முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சா் சு.முத்துசாமி

கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கைத்தறித் துறை சாா்பில் தேசிய கைத்த... மேலும் பார்க்க

புத்ககங்களைத் தோ்வு செய்ய குழந்தைகளுக்கு வழிகாட்டும் கதை சொல்லிகள்

கதை சொல்லிகள் மூலம் குழந்தைகள் தாமாக புத்தகங்களைத் தோ்வு செய்ய வழிகாட்டுகிறது ஈரோடு புத்தகத் திருவிழா. ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1- ஆம் தேதி தொடங்கி வரும்... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு

ஈரோடு திண்டலில் உள்ள விஇடி கல்லூரியின் 1,660க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் சுமாா் 1 மணி ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த, துடுப்பதி செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

‘பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும்’

பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டியில் ... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டம்: பாரம்பரிய கைத்தறியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு முகாம்

தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட நிலையில் பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற சந்திராயன் திட்ட துணை இயக்குநா் இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி ... மேலும் பார்க்க