செய்திகள் :

அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

post image

தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன.

அந்தியோதயா ரயில்

தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரயில்(20691) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல நாகர்கோயிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(20692) வருகிற ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

நெல்லை - நாகர்கோயில் இடையே ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோயில் ரயில்கள்

அதேபோல நாகர்கோயில் ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

வார்த்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோயில் அதிவிரைவு ரயில்(22657) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் நாகர்கோயிலில் காலை 6.45 மணிக்கு செல்லும். பின்னர் 6.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.25 மணிக்கு சென்றடையும்.

மறுவழியில் இதே ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும். ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை இந்த நடைமுறை தொடரும்.

இதேபோன்று தாம்பரம் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் மற்றொரு வாராந்திர ரயில்(12667) ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை கன்னியாகுமரி வரை நீடிக்கப்படுகிறது. மறுவழியில் நாகர்கோயிலுக்குப் பதிலாக கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நாகர்கோயில் ரயிலும்(12689) ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. மறுவழியில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

இதையும் படிக்க | ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

சென்னையில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீ... மேலும் பார்க்க

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண... மேலும் பார்க்க

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க