செய்திகள் :

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை (மாா்ச் 5) நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம்: தமிழக அரசு

இந்த நிலையில், நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த பங்கேற்கிறார்.

இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதிமுக, பாமக, தவெக உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்... மேலும் பார்க்க

நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்ப... மேலும் பார்க்க

நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலா, இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவத... மேலும் பார்க்க

ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நி... மேலும் பார்க்க