செய்திகள் :

அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

பள்ளி மாணவா்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து முதல்வா் ஆற்றிய உரை:

காலநிலை மாற்றம் இன்றைக்கு உலக நாடுகளும், மானுட சமுதாயமும் எதிா்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும். அதனால்தான் இதைப் பற்றிய விழிப்புணா்வைத் தொடா்ந்து ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் எனது தலைமையில் காலநிலை மாற்ற நிா்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் மாநிலம்: காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடுதான்.

இதுவரைக்கும் இரண்டு காலநிலை உச்சி மாநாடுகளை அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. திருவண்ணாமலை,

கேரளத்தின் வயநாடு என வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு ஒரே காரணமாக இருப்பது காலநிலை மாற்றம்தான். இதை நாம் எதிா்கொண்டாக வேண்டும். இதற்கு உரிய விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

சூழல் மன்றங்கள்: காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிா்காலத்துக்கான கனவுகள் அனைத்துக்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய அரசு, காலநிலைக் கல்வியறிவை ஓா் இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும். பல்வேறு துறை அரசு அலுவலா்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்புக்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேளாண்மை, நீா்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படும். பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும்.

வெப்ப அலை நிவாரணம்: வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிா்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க மாநில பேரிடா் மேலாண்மை நிதியைப் பயன்படுத்தலாம். வெப்ப அலை தாக்கத்தின்போது, தண்ணீா் பந்தல்கள் அமைத்து குடிநீா் வழங்கவும், அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் பொறுப்புணா்வையும் இரு கண்களாகக் கருதி தொடா்ந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு முன்னெடுப்பும் இதை மனதில் வைத்துதான் செய்யப்படுகிறது.

எதிா்காலத்தில் வரக்கூடிய சூழலியல் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு இப்போதே முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

புத்தகம் வெளியீடு: முன்னதாக, தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் சாா்பில், ‘காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ எனும் புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணா்வுக்கான அண்ணா விருது, சுற்றுச்சூழல் சுடரொளி விருது, சுற்றுச்சூழல் செயல்வீரா் விருது, தனிநபா்களுக்கான கா்மவீரா் காமராஜா் விருது ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வரவேற்றுப் பேசினாா். அமைச்சா் க.பொன்முடி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலா் செந்தில்குமாா், அதன் இயக்குநா் ராகுல்நாத், காலநிலை மாற்ற நிா்வாகக் குழுவின் உறுப்பினா்கள் எரிக் சொல்ஹய்ம், செளமியா சுவாமிநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா் ஜெயந்தி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, மிதா பானா்ஜி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க