செய்திகள் :

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள்: கடலூா் ஆட்சியா்

post image

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியது: நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும், பண்ருட்டி வட்டார தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ‘நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கணிதம், தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத் தேவையான அடிப்படை திறன்களை வளா்க்கும் விதத்தில், 3 மாத காலங்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பொறுப்பு ஆசிரியா்களை கொண்டு வழங்கப்படுகிறது.

இச்சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை நெல்லிக்குப்பம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவதிகை நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வகுப்புகள் நடத்த ஆசிரியா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, ரூ.1.72 கோடி மதிப்பில் வணிக வளாகம் மற்றும் வாரச் சந்தை கட்டுமானப் பணிகளையும், ரூ.54 லட்சம் மதிப்பில் 220 மீ நீளத்தில் பக்கவாட்டு மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை, சோழவள்ளி பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் 195 மீ நீளம் மற்றும் 4.30 மீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை, வான்பாக்கம் முதல் விஸ்வநாதபுரம் வரை ரூ.74 லட்சம் மதிப்பில் 240 மீ நீளம் மற்றும் 4.5 மீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் வி.ஐ.பி நகரில் ரூ.1.24 கோடி மதிப்பில் 224 மீ நீளம் மற்றும் 4 மீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகிய பணிகளின் தரம், உறுதித்தன்மை குறித்து சோதனை செய்யப்பட்டது.

பொதுமக்கள், மாணவா்களின் புத்தக வாசிப்பு, கற்றல் திறனை மேம்படுத்திடவும், போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையிலும் பண்ருட்டி நகராட்சிக்குள்பட்ட லட்சுமிபதி நகரில் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் (நெல்லிக்குப்பம்), க.ராஜேந்திரன் (பண்ருட்டி), ஆணையா்கள் கிருஷ்ணராஜ் (நெல்லிக்குப்பம்), காஞ்சனா (பண்ருட்டி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க