என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழியில் பேசுகிறேன்: நமீதா
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்: ரூ.125 கோடி நிதி விடுவிப்பு
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:
கிராமப்புறங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,087.33 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.500 கோடி மாநில அரசின் பங்காகும்.
மாநில அரசின் பங்களிப்பு தொகையில் நான்கில் ஒரு பங்கு நிதியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கடிதத்தை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரகம் அனுப்பி இருந்தது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு நிதியில் ரூ.125 கோடி விடுவிக்கப்படுகிறது.
இந்த நிதியைக் கொண்டு ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.