செய்திகள் :

`அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!’ - அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

post image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு' தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ``தி.மு.க-வின் தொண்டர்கள் கொள்கை வீரர்களாக இருக்கின்றனர்.

கொரோனா காலத்தில் நாடே முடங்கியிருந்த நேரத்தில், களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்கள் தி.மு.க-வினர். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்தார்கள்.

தற்போது புதிதாக ஒரு நடிகர் வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் வெளியே வராத, மக்களை சந்திக்காத அந்த நடிகர், தற்போது தேர்தல் வருவதால் வந்திருக்கிறார்.

அன்புமணி

சுந்தரா டிராவல்ஸ் போல பச்சைப் பேருந்தில் ஒருவர் வருகிறார். காவிப் பேருந்தில் வேறு ஒருவர் வருகிறார். ஆனால் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களை சந்திக்கிறார்.

அவர்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பா.ம.க அன்புமணி பச்சையாகப் பொய் பேசுகிறார். அப்பாவுக்கு துரோகம் செய்த அவர், மக்களுக்காக என்ன செய்தார் ?

பதவிக்காக முகவரியை மாற்றி கட்சியைக் கைப்பற்றியவருக்கு, தி.மு.க-வைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ? தி.மு.க கூட்டணியில் இருந்தபோதுதான் அவர் மத்திய அமைச்சரானார். அதனால் தி.மு.க-வைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்றார்.

பாமக: `கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில்தான் நடக்கும்!’ – எம்.எல்.ஏ அருள் சொல்வதென்ன ?

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில... மேலும் பார்க்க

H-1B விசா சர்ச்சை: சீனா K விசா அறிமுகம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில் H-1B விசா மாதிரியான புது விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது சீனா.அமெரிக்க... மேலும் பார்க்க

'சிரஞ்சீவி, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுது? இதெல்லாம்'- செல்லூர் ராஜு

சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியிருக்கிறார். இதுதொடர்பாக நேற்று(செப்.21) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ர... மேலும் பார்க்க

ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க