செய்திகள் :

அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார்: நயினார் நாகேந்திரன்

post image

மதுரை: மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் வெள்ளிக்கிழமை வழிபட்ட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார் என தெரிவித்தார்.

இந்து முன்னணி அமைப்பு சாா்பில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு, மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு, அண்மையில் பக்தா்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. அறுபடை வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட வேல்கள், இந்தக் கோயில்களில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, இந்து முன்னணி அமைப்பினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பிறகு, அங்குள்ள மாதிரி கோயில்களில் அவா் வழிபட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

பழனியில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தினார்கள்.அரசியல்வாதிக்கும் ஆன்மீகம் இருக்கும். என்னை சாமி கும்பிடக்கூடாது என யாராவது சொல்ல முடியுமா?.

மாநாட்டுத் திடலில் அரசியல் அதிகம் பேசக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால் பக்தி ஆன்மீகம் குறித்து மட்டும் பேசுவோம்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரம் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம், அவர்கள் ஏன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகிறார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார்.

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள்தான் அவர்களுக்கு ஊடகத்தின் வாயிலாக நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். ஆந்திரத்தில் இருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்யக்கூடாதா?

ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என பேசுவது தொடர்பான கேள்விக்கு, இப்போது ஒன்றும் தேர்தல் நடைபெறவில்லை. நாங்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் வாக்குகள் கேட்கவில்லையே.

திமுக ஆட்சியில் ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டியுள்ளது. முதல்வருக்கு பக்தி இல்லை. அதனால் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் நடத்திய மாநாடு அரசியலுக்காக நடத்திய மாநாடு.

குடமுழுக்கு கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது அரசின் கடமை. அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டதே கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்குதான். மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்கள். அதனால் இதனை செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.

எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சானை செய்யப்படும் என உள்ளது. அறுபடை முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றத்திற்கும் கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆய்வறிக்கை இன்னும் முடிக்க வேண்டியதுள்ளது. முடித்த பின்பு கண்டிப்பாக கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

மேலும், அமித்ஷா அடிக்கடி இனி தமிழகம் வருவார் என அவர் கூறினார்.

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (... மேலும் பார்க்க

ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க

4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதி... மேலும் பார்க்க

தந்தை இறந்ததால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கல்லூரியில் படிக்க உதவிய ஆட்சியர்!

கோவை: தந்தை இறந்ததால் உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் இரவு 7 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணை வாங்கி கொட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!

சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகளின் முதலீடு 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து ரூ.37,600 கோடியாக உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிக... மேலும் பார்க்க