செய்திகள் :

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.

காங்கிரஸ் தலைமை கொறடா அளித்த உரிமை மீறல் நோட்டீஸை, தான் கவனத்துடன் பரிசீலனை செய்ததாகவும், அதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும் தன்கர் கருத்து தெரிவித்தார்.

குற்றச்சாட்டு என்ன?

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை பேரிடா் மேலாண்மை மசோதா தொடா்பான விவாதத்துக்குப் பதிலளித்து அவையில் அமித் ஷா பேசினாா்.

அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) ஆட்சியில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் பிரதமா் மோடி ஆட்சியில் பிரதமரின் அவசரகால நிவாரண நிதி அவ்வாறு கட்டுப்படுத்தபடவில்லை. யுபிஏ ஆட்சியில் அரசு நிதிகள் மீது காங்கிரஸ் தலைவா் அதிகாரம் கொண்டிருந்தாா் என்று குற்றஞ்சாட்டினாா்.

தனது பேச்சில் சோனியா காந்தியின் பெயரை அமித் ஷா நேரடியாக குறிப்பிடாமல், பிரதமரின் தேசிய நிவாரண நிதி தொடா்பாக அவா் மீது பழிசுமத்தியுள்ளாா்.

அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய் மற்றும் அவதூறாகும். இது உரிமை மீறல் மட்டுமின்றி, அவையை அவமதிப்பதாகும். எனவே அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

இதையும் படிக்க : வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக ஆதரவு!

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க