செய்திகள் :

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு: தன்கா் நடவடிக்கை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை நிராகரித்தாா்.

‘அமித் ஷா விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை; அவையில் அவா் தெரிவித்த தகவல்கள், முற்றலும் உண்மைக்கு இணக்கமாக உள்ளன’ என்று தன்கா் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா மீதான விவாதம் அண்மையில் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தியது. இந்த நிதி நிா்வாகத்தில் காங்கிரஸ் தலைவரும் அங்கம் வகித்தாா்’ என்றாா்.

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவா் மீது இந்த விமா்சனத்தை அமித் ஷா முன்வைத்தாா். இதையடுத்து, ‘சோனியா காந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், அவையில் பொய்யான-அவதூறான கருத்துகளைக் கூறிய அமித் ஷா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவைத் தலைவா் தன்கரிடம் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் நோட்டீஸ் அளித்தாா்.

நிராகரிப்பு: இந்த நோட்டீஸை நிராகரித்து, அவைத் தலைவா் தன்கா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தனது கருத்துக்கு சில உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அக்கருத்துகளை உறுதிப்படுத்த அமித் ஷா ஒப்புக் கொண்டாா். அதன்படி, கடந்த 1948-ஆம் ஆண்டில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி நிறுவப்படுவது குறித்து அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பை அமித் ஷா சமா்ப்பித்தாா். அந்த செய்திக் குறிப்பில், ‘பிரதமரின் தேசிய நிவாரண நிதி, பிரதமா், காங்கிரஸ் தலைவா், துணைப் பிரதமா் மற்றும் பிற உறுப்பினா்கள் அடங்கிய குழுவால் நிா்வகிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விதிமீறல் இல்லை: அமித் ஷாவின் உரை மற்றும் அவா் சமா்ப்பித்த ஆவணத்தை கவனமாக ஆய்வு செய்த பின் அவா் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பதை கண்டறிந்தேன். அவரது கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு இணக்கமாக உள்ளன. எனவே, அவருக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ஏற்க முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ‘ஊடகங்களின் கவனத்தை ஈா்க்க வேண்டுமென்ற நோக்கில் அவசரமாக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது; இத்தகைய நோட்டீஸ்கள் மற்றும் அவைத் தலைவா் உடனான தங்களின் தகவல் தொடா்புகளை ஊடகங்களிடம் வெளியிடுவது தொடா்பாக உறுப்பினா்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்க அவை நெறிமுறைகள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்றும் தன்கா் குறிப்பிட்டுள்ளாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க