செய்திகள் :

அமித் ஷா நாளை தமிழகம் வருகை!

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அடுத்த ஆண்டும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக முன்னதாக தகவல் தெரியவந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2026 பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சு தொடர்பாகவும், தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவும் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை மறுநாள்(ஏப். 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்த அரசியல் சூழலில் அமித் ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலை: முதல்வர் ஒப்பந்தம்

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க