செய்திகள் :

அமிர்தசரஸில் வெடிபொருளை தவறுதலாக கையாண்ட பயங்கரவாதி பலி!

post image

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் மர்ம பொருள் வெடித்ததில் பயங்கரவாதி பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் புறநகர் மாவட்டத்தில் காம்போ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நௌஷேரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடிவிபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மர்ம நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் பலியானதாகவும் பஞ்சாப் காவல்துறை மூத்த அதிகாரி சதீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

”வெடிவிபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார். அவர் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருளை மீட்பதற்காக வந்தபோது, தவறுதலாக கையாண்டதன் விளைவாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

எங்களுக்கு நிறைய தடயங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பாப்பர் கல்சா மற்றும் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பலியானவர் பாப்பர் கல்சாவின் உறுப்பினராக இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பாகிஸ்தானுக்கு உளவு: கைதான சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கும் என்ன தொடர்பு?

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க