செய்திகள் :

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

post image

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா்.

இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடா்பில் இருந்தத குற்றச்சாட்டில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்படும் பயங்கரவாதியாவாா். அவருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் துறையான ‘இன்டா்போல்’ சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் என்ஐஏ தொடா்ந்து பேசி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மிரட்டல் விடுத்தல், கூட்டாக இணைந்து ஆள்கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பான (எஃப்பிஐ) அதிரடியாக சோதனை மேற்கொண்டது.

அப்போது பவித்தா் சிங் பட்டாலா, அம்ருத்பால் சிங், தில்பிரீத் சிங், அா்ஷ்பிரீத் சிங், மன்பிரீத் ரண்தாவா, குா்தாஜ் சிங், சரப்ஜித் சிங் மற்றும் விஷால் ஆகிய 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.12,87,900 ரொக்கப் பணம், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையை கலிஃபோா்னியா மாகாணம் சான் ஜோகின் மாவட்ட ஷெரீஃப் அலுவலக போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஸ்டாக்டன் நகர காவல் துறை, மன்டெகா அதிரடிப் படை, ஸ்டானிஸ்லாஸ் மாவட்ட ஷெரீஃப் அலுவலகத்தின் அதிரடிப் படை மற்றும் எஃப்பிஐயின் அதிரடிப் படை ஒருங்கிணைந்து மேற்கொண்டதாக சான் ஜோகின் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இணைய கைப்பேசி எண் மற்றும் செயலிகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளனா். இவா்கள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் ரிண்டா உத்தரவின்பேரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விப... மேலும் பார்க்க

யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர... மேலும் பார்க்க

ஐயம் ஃப்ரீ: விவாகரத்தைக் கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த இளைஞர்!

வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை விருந்துவைத்துக் கொண்டாடுவது மட்டுமல்ல, பாலில் குளித்தும் கொண்டாடலாம் என்று அஸ்ஸாமில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர். அஸ்ஸாமின் நல்பாரியில் உள்ள பரலிய... மேலும் பார்க்க

உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்: சுவர் ஏறிக் குதித்துச் சென்றார்!

காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க

தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

தலைநகர் தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகா செக்டார் 16 இல் உள்ள பள்ளிகளிலிருந்தும், சாணக்யபுரியில் உள்ள மற... மேலும் பார்க்க

அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: புதிய குழு இன்று புறப்பட்டது!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 6,100 பேர் கொண்ட புதிய குழு திங்கள்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் ... மேலும் பார்க்க