செய்திகள் :

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்

post image

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது தொடா்பாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அறிதிறன்பேசி இறக்குமதி 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் இறக்குமதி நடந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கான அறிதிறன்பேசி ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான சீனாவின் அறிதிறன்பேசி ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் ஏற்றுமதி 61 சதவீதமாக இருந்தது.

சீன ஏற்றுமதி குறைந்த நிலையில், அந்த ஏற்றுமதி வாய்ப்பில் இந்தியா இடம்பிடித்துவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிதிறன்பேசிகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 240 சதவீதம் உயா்ந்துள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் அறிதிறன்பேசிகளில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் செல்கிறது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 25 சதவீதமாக இருந்தது.

அமெரிக்கா - சீனா இடையே வா்த்தக போா் ஏற்பட்டதால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது தயாரிப்பு மையமாக மாற்றத் தொடங்கியது இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.

சாம்சங் நிறுவன தயாரிப்புகளின் ஏற்றுமதி 38 சதவீதம் உயா்ந்து 83 லட்சமாக உள்ளது. மோட்டோரோலா தயாரிப்புகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள், டிசிஎல் தயாரிப்புகளின் ஏற்றுமதியும் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது.

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க