செய்திகள் :

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

post image

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச்ஏஎல்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதில் இழுபறி நீடித்து வருவதால் இந்த திட்டம் தற்போது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு டி.கே.சுனில் கூறியதாவது: தொழில்நுட்ப பரிமாற்றம் (டிஓடி) நடைமுறைகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக 80 சதவீத பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டன. அடுத்து வர்த்தகரீதியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.

அடுத்த மார்ச் மாதம் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின்களை தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என நம்புகிறேன்.

ஏனெனில், எஃப்-414 ஜெட் என்ஜின்கள் தயாரிப்பு திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்வது தேஜஸ் இலகு ரக போர் விமானம் மார்க் 2 வகை மற்றும் 5-ஆம் தலைமுறை நவீன நடுத்தர போர் விமானம் (ஏஎம்சிஏ) ஆகிய திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அதேபோல் இந்திய ராணுவத்துக்கு இலகுரக போர் ஹெலிகாப்டரான "பிரசண்ட்' ஹெலிகாப்டரை விநியோகிக்கும் ஒப்பந்தத்தை எச்ஏஎல் வெற்றிகரமாக கைப்பற்றியது. அதன்படி 2028 முதல் பிரசண்ட் ஹெலிகாப்டர்களை ராணுவத்துக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இந்திய ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் ஒப்பந்தமாகும்' என்றார்.

180 தேஜஸ் மார்க் 1ஏ வகை போர் விமானங்கள் ரூ.1.15 லட்சம் கோடியில் எச்ஏஎல்-இடமிருந்து இந்திய விமானப் படை கொள்முதல் செய்யவுள்ளது. தேஜஸ் மார்க் 1ஏ இலகு ரக போர் விமானம் மற்றும் ஏஎம்சிஏ திட்டம் ஆகிய இரண்டும் இந்திய விமானப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இத்துடன் 156 பிரசண்ட் ஹெலிகாப்டர்களை ரூ.62,700 கோடியில் எச்ஏஎல்-இடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை கடந்த மார்ச் பாதுகாப்பு அமைச்சகம் விரைவுப்படுத்தியது.

பிரசண்ட் ஹெலிகாப்டர் உள்நாட்டிலேயே முதல்முதலாக தயாரிக்கப்பட்டு 4,500 மீட்டர் உயரத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய திறனுடைய ஹெலிகாப்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் கனமழை: ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 9 பேர் மீட்பு!

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேரை காவல்துறை மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-ஸ்ர... மேலும் பார்க்க

11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்... மேலும் பார்க்க

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க